டிரெண்டிங்

டீக்கடை மாஸ்டருக்கு பால் போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த ஆலந்தூர் மநீம வேட்பாளர்

kaleelrahman

ஆலந்தூர் மநீம வேட்பாளர் டீக்கடையில் டீ மாஸ்டருக்கு பால் போட்டுக் கொடுத்து டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

சென்னை ஆலந்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் சரத்பாபு வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆலந்தூர் முழுவதும் வாக்கு சேகரித்து வரும் அவர், மூவரசம்பட்டு குளத்தில் இருந்து தனது பரப்புரையை துவங்கி அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது ஒரு டீக்கடைக்குச் சென்ற வேட்பாளர் வட மாநிலத்தவரிடம் இந்தியில் பேசி வாக்கு சேகரித்ததோடு டீக்கடையில்  மாஸ்டருக்கு பால் போட்டுக் கொடுத்து வாக்கு கேட்டது வரவேற்பை பெற்றது.