டிரெண்டிங்

“எம்ஜிஆரை போல நானும் புரட்சி செய்வேன்”- ஆலந்தூர் தொகுதி ம.நீ.ம வேட்பாளர் நேர்காணல்

Rasus

’கோழைகளே, மக்கள் நீதி மய்யத்தை பாஜகவின் பி டீம் என்பார்கள்’ என மக்கள் நீதி மய்யத்தின் ஆலந்தூர் தொகுதி வேட்பாளர் சரத்பாபு தெரிவித்தார்.

புதிய தலைமுறை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கிட்டத்தட்ட 15 வருடங்களாக நான் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். மக்களுடன் அதிக தொடர்பில் இருக்கிறேன்.

கோழைகளே மக்கள் நீதி மய்யத்தை பாஜகவின் பி பீம் என்பார்கள். 1967-ஆம் ஆண்டு இந்த தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்று ஒரு புரட்சியை செய்தார். அதேபோல் இந்தத் தொகுதியில் நானும் வெற்றி பெற்று புரட்சி செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார். மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் முழு நேர்காணலை கீழுள்ள வீடியோவில் காணலாம்.