டிரெண்டிங்

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்திக்கும்: மருதுகணேஷ் பேட்டி

webteam

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் அதிமுக பெரும் பின்னடைவை சந்திக்கும் என திமுக சார்பில் களம் காணும் மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.

காசிமேடு மீனவ சங்கத்தின் முக்கிய பிரமுகர்களை இன்று சந்தித்து ஆதரவு திரட்டிய அவர் காசிமேடு மீன் பிடிதளத்தை மேம்படுத்துவதாகவும், அடிப்படை பிரச்னைகளைத் தீர்‌த்து வைப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொகுதியை சேர்ந்த வேட்பாளராக இருப்பதால்தான் வெற்றி பெறுவது உறுதி எனவும் குறிப்பிட்டார்.

கடந்த முறையை விட தற்போது பல்வேறு கட்சிகளின் ஆதரவு திமுகவுக்கு கிடைத்துள்ளதாக கூறிய அவர், மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு பெருகிக்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அதிமுக அரசின் நற்பெயர் மிகவும் பின்தங்கியுள்ளதாக கூறினார். எனவே இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பின்னடைவை சந்திப்பது உறுதி எனவும் மருதுகணேஷ் தெரிவித்தார். திமுக சார்பில் டிசம்பர் 1ஆம் தேதி மருது கணேஷ் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.