டிரெண்டிங்

நமது அம்மா கவிதையில் 18 எம்எல்ஏக்களுக்கு மறைமுக அழைப்பு

நமது அம்மா கவிதையில் 18 எம்எல்ஏக்களுக்கு மறைமுக அழைப்பு

webteam

மீண்டும் அதிமுகவில் இணைய வருமாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது. 

"நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கவிதை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் அதிமுக நிழலில் ஒதுங்க ஜெயலலிதா ஆன்மா அனுமதிக்காது என்று சசிகலா குடும்பத்தினர் பற்றி மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரது பரிந்துரையால் வெற்றிப் பெற்றவர்கள், அவர் வெறுத்த கூட்டத்திடம் தஞ்சமடைந்து தவறிழைத்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்துவிட்டனர் என்று கவிதையில் கூறப்பட்டுள்ளது. 18 பேரும் பரிதவித்து கிடக்க ஜெயலலிதாவால் வெறுக்கப்பட்டவர் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார் என்று கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நரி சூழ்ச்சியை உணர்ந்து ஒன்றாகி எழுவது தான் நன்றி கொண்டோர் காரியம். அது நடக்கட்டும் சீக்கிரம் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் மீண்டும் இணைய வருமாறு மறைமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.