டிரெண்டிங்

வெறி நாய்கள் கடித்து 8 ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு!

JustinDurai

கன்னியாகுமரி அருகே  வெறி நாய்கள் கடித்து 8 ஆடுகள் பரிதாபமாக இறந்துள்ளன. 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் அஜினா அகமத். இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீட்டில் கொட்டகை அமைத்து ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது 19 ஆடுகளை வளர்த்து வரும் நிலையில் நேற்றிரவு 19 ஆடுகளையும் கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை அஜினா அகமத் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல கொட்டகைக்கு சென்ற போது 8 ஆடுகள் கழுத்தில் மர்ம விலங்கால் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அதிகாலை வீட்டிற்கு வெளியே வரும்போது அந்த கொட்டகையில் இருந்து 5 க்கும் மேற்பட்ட நாய்கள் வெளியேறி சென்றதாக கூறினார். இதையடுத்து ஆடுகளை கடித்துக் கொன்றது வெறி நாய்கள் என்பது தெரியவந்தது.