டிரெண்டிங்

வாகன சோதனையில் சிக்கிய ரூ. 30 லட்சம் மதிப்புடைய செம்மரக்கட்டைகள்.!

kaleelrahman

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை தமிழக -ஆந்திர எல்லையில் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்

 
தமிழக - ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த காரை மடக்கி சோதனையிட்ட போது, ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியாதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் காரின் பின் பக்கத்தை திறந்து பார்த்தனர்.

அப்போது, அங்கு செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் செம்மரக்கட்டைகளை கடத்தியவரை கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், யாருக்காக கடத்தப்படுகிறது, முக்கிய குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.