கடலில் ஏற்பட்ட நீர்சுழல்
கடலில் ஏற்பட்ட நீர்சுழல் Twitter
டிரெண்டிங்

திடீரென கடலில் ஏற்பட்ட நீர்ச்சுழல்.. அலறிய மக்கள்! #WatchVideo

PT WEB

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கிளியர் கடற்கரையில் திடீரென ஏற்பட்ட நீர்ச்சுழலின் தாக்கத்தால் 2 பேர் காயமடைந்தனர்.

கடற்கரையில் மக்கள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட நீர்ச்சுழல் அதிவேகத்தில் கரையை நோக்கி நகர்ந்தது. செய்வதறியாது அங்கிருந்து மக்கள் ஓட முயன்றனர். இருப்பினும் கடலில் நின்று கொண்டிருந்த சில மக்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களையும் அவர்களின் உடமைகளையும் தூக்கி அடித்தபடி அந்த நீர்ச்சுழல் உள்சென்றது. இதில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான காட்சிகள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பிட்ட அந்த வீடியோவை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.