டெக்

ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் டிக்டாக் செயலி ?

webteam

டிக்டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்க ஆப்பிள் ‌மற்றும் கூகு‌ள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக த‌‌கவல் வெளியாகியுள்ளது.

டிக்டாக் மொபைல் செயலிக்கு தடை விதிக்குமாறு கடந்‌த 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீ‌திமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. ‌‌இந்நிலையில் டிக்டாக் செயலியை த‌த்தமது பிளே ஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் ‌எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும், இதுகுறித்து அதிகார‌பூர்வ அறிவிப்பு எதையும் மத்திய‌அரசு‌ ‌வெளியிடவில்லை. முன்னதா‌க, தங்கள் தளத்தில் இருந்த விதிமுறைகளை மீறிய 60 லட்சம் பதிவுகளை நீக்கிவிட்டதாக டிக்டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது.‌ மேலும், 13 வயதுக்கு மேற்பட்டவர்களே இச்செயலியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் அரசின் விதிகளை பின்பற்றும் வகையில் தேவையா‌ன மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் டிக்டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது.