இந்திய சந்தையில் நாள்தோறும் பல ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் சில நிறுவனங்கள் குறைந்த விலையில், அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுவருகின்றன. இதனால் தங்கள் இடத்தை இழந்த சில நிறுவனங்கள் மீண்டும், வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்த சில புதிய மாடல் செல்போன்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி சாம்சங் நிறுவனம் இந்த மாதத்திற்கான தனது புதிய மாடல்களான கேலக்ஸி ஜெ4 மற்றும் ஜெ6 ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ளன.
இதில் ஜே6 மாடலின் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை நகரில் 21ஆம் தேதி வெளியிடப்படும் இந்த ஸ்மார்ட்போன், சந்தைகளில் உள்ள கடைகளில் 22ஆம் தேதி விற்பனைக்கு வரும். ஜெ6 மாடலை பொறுத்தவரையில் 5.6 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவுடனும், ஹக்டா-கோர் ப்ராசஸருடனும் வெளியாகிறது. அத்துடன் 3ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் என்ற இரண்டு ரகங்களில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 16 எம்பி கேமராவும், முன்புறத்தில் 8 எம்பி சென்சார் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பின்புறத்தில் கைரேகை பதிவு செய்யும் சென்சார் உள்ளது. இதன் இண்டெர்னல் ஸ்டோரேஜ் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்ற இரண்டு ரகங்களில் வெளியாகிறது. இதுதவிர கூடுதலாக மைக்கோ கார்டு பொறுத்தும் வசதி உள்ளது. 3,300 எம்ஏஹெச் பேட்டரியுடன், இரண்டு சிம் கார்டு பொறுத்தும் வசதி இதில் இருக்கிறது. சிம் கார்டில் வோல்ட் வசதியும் உள்ளது. இதன் விலை ரூ.13,000 லிருந்து ரூ.14,000 வரை இருக்கும். ஆன்லைன் விற்பனை சந்தைகளை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும்.