டெக்

TRUE 5G சேவையை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ! நியூஇயர் ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்ட ஆஃபர்ஸ்!

Rishan Vengai

இந்தியாவில் 5G நெட்வொர்க்குகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பிறகு, ரிலையன்ஸ் ஜியோ இப்போது ஜியோ பயனர்களுக்கு புத்தாண்டு ஆஃபராக TRUE 5G சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் அடுத்த தலைமுறை 5G இணைப்பைக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்துவருகிறது. ஏற்கனவே 5G நெட்வொர்க்குகளை அறிமுகம் செய்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, தற்போது புத்தாண்டின் புதிய அங்கமாக TRUE 5G சேவையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அதில் வெல்கம் ஆஃபரும் சேர்க்கப்பட்டுள்ளது.

”லக்னோ, திருவனந்தபுரம், மைசூரு, நாசிக், அவுரங்காபாத், சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார் மற்றும் டெராபஸ்ஸி” உட்பட இந்தியா முழுவதும் உள்ள 11 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ தனது True 5G சேவையை வழங்கியுள்ளது.

திருவனந்தபுரம், மைசூரு, நாசிக், அவுரங்காபாத் மற்றும் சண்டிகரில் 5G வழங்கும் முதல் மற்றும் ஒரே நெட்வொர்க்காக, ரிலையன்ஸ் ஜியோ இந்த பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அடுத்த தலைமுறை இணைப்பைக் கொண்டுவருவதில் முன்னணியில் உள்ளது.

மேற்கூறிய நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் பெற உரிமை பெறுவார்கள் மற்றும் ஜியோ பயனர்கள் அன்லிமிடட் டேட்டாவை 1 Gbps+ வரை அதிவேக வேகத்தில் கூடுதல் கட்டணமின்றி அணுக இந்த ஆஃபர் அனுமதிக்கிறது. இன்று முதல் அறிமுகமாகியுள்ள இந்த ஆஃபர், மேலே குறிப்பிட்ட நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் நிறுவனத்தின் அதிவேக டேட்டா நெட்வொர்க்கின் திறன்களை முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கிறது.

இந்தியாவில் அதன் 5G நெட்வொர்க்குடன் Jio மூன்று தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளது. ”முதலாவதாக, தனித்த 5G கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட 5G நெட்வொர்க்குடன், 4G நெட்வொர்க்குடன் எந்த தொடர்பும் இல்லாமல் முழு சேவை. 2ஆவதாக, ஜியோ 700 மெகா ஹெர்ட்ஸ், 3500 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அளவில் சிறந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் கவரேஜை வழங்குகிறது. 3ஆவதாக, ஜியோ சிறந்த செயல்திறனுக்காக கேரியர் ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது.

True 5G அறிமுகம் குறித்து ஜியோ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த 11 நகரங்களில் ஜியோTrue 5Gயை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. மேலும் நாங்கள் True 5G சேவைகளை வெளியிடத் தொடங்கியதில் இருந்து அதை எங்களின் மிகப்பெரிய அறிமுகங்களில் ஒன்றாக மாற்றுகிறோம். ஜியோ True 5G தொழில்நுட்பத்தின் மாற்றத்தக்க பலன்களை அனுபவிப்பதன் மூலம் 2023ஆம் ஆண்டு தொடங்கும் இந்த நகரங்களில் உள்ள மில்லியன் கணக்கான ஜியோ பயனர்களுக்கு இது ஒரு டிரிப்யூட்டாகும்.

இந்த நகரங்கள் முக்கியமான சுற்றுலாத் தலங்களாகவும், நம் நாட்டின் முக்கிய கல்வி மையங்களாகவும் உள்ளன. ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதன் மூலம், இப்பகுதியின் நுகர்வோர் சிறந்த தொலைத்தொடர்பு வலையமைப்பைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், சுயாட்சி, கல்வி, ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, கேமிங், ஹெல்த்கேர், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் எல்லையற்ற வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

மேலும், “பிராந்தியங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான எங்கள் தேடலுக்கு சண்டிகர், பஞ்சாப், ஹரியானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.