மனித சமுதாயம் அறிவியல் வளர்ச்சியில் மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. சில கிலோமீட்டர்களுக்கு அருகில் இருக்கும் மனித நடமாட்டம் குறித்தே அறிதல் இல்லாமல் தனித்தனி தீவுகளில் மனித சமுதாயம் வாழ்ந்த காலத்தில் இருந்து தற்போது பூமி பந்தில் இருந்து பல லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிரகங்கள் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறி இருக்கின்றோம். இந்த அறிவியல் வளர்ச்சியில் செயற்கைகோள்களின் பங்களிப்பு அளப்பரியது. நேற்று கூட இஸ்ரோவில் இருந்து இந்தியா செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது.
ஆனால், எல்லா வினைக்கும் எதிர்வினை இருப்பதுபோல செயற்கைக்கோள் ஏவுதல் உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளுக்கு எதிர்வினையும் இருந்து கொண்டே இருக்கிறது. அதுதான் விண்வெளி குப்பைகள் எனும் பேராபத்து. விண்வெளி குப்பைகள் என்பவை விண்வெளியில் தன்னுடைய பயன்பாட்டை முடித்துக் கொண்ட பிறகும் விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் பாகங்கள். அதேபோல் வெடித்துச் சிதறும் பொருட்கள்., இவையெல்லாம் பூமியைச் சுற்றிய விண்வெளியில் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.
NASA விண்வெளி குப்பைகள் நிபுணர் டான் கெஸ்லர், பூமியானது ஒரு குறிப்பிட்ட காலத்தை கடந்ததும், விண்வெளி குப்பைகளின் மொத்த அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று கூறுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளியின் குப்பையானது 50% அதிகரித்துள்ளதாக கூறுகிறார்.
கெஸ்லர் எஃபெக்ட் என்றும் அழைக்கப்படும் கெஸ்லர் சிண்ட்ரோம், 1978 இல் நாசா விஞ்ஞானி டொனால்ட் ஜே. கெஸ்லரால் கணிக்கப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும். இது பூமியின் சுற்றுப்பாதையில் விண்வெளி குப்பைகளுக்கு இடையேயான மோதல்களால் ஏற்படும் விளைவைக் குறிக்கும் கோட்பாடு.
விண்வெளி குப்பைகள் குவிதல்!
செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, செயலிழந்த செயற்கைக்கோள்கள், மற்றும் ராக்கெட் உதிரி பாகங்கள் மற்றும் பிற பொருள்கள் என விண்வெளி குப்பைகளின் அளவானது நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.
மோதல் அடுக்கு:
அதில் இரண்டு குப்பைத் துண்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது, அவை இன்னும் அதிகமான குப்பைகளை உருவாக்கி, சிக்கலை உருவாக்குகிறது
இதன் விளைவாக உருவாகும் குப்பைகள் புதிய செயற்கைக்கோள்களை ஏவுவதையோ அல்லது விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதை கடினமாக அல்லது சாத்தியமற்றதாக செய்யலாம்,
கெஸ்லர் சிண்ட்ரோமால், விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வழிசெலுத்தல் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்றில் கடுமையான, நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தலாம்.
நாசா சர்வதேச நாடுகளுடன் இணைந்து Clean Space அதாவது, எதிர்கால ESA பணிகளில் இருந்து குப்பைகள் உற்பத்தியைக் குறைக்கவும், அல்லது அங்கிருக்கும் குப்பைகளை அகற்றவும் உத்திகளை ஆராய்ந்து வருகின்றனர்.
பின் விளைவுகள்
கெஸ்லர் சிண்ட்ரோம் நிகழ்வால் பின் விளைவுகள் மிக கடுமையானதாக இருக்கும் என்கிறார்கள். கெஸ்லர் சிண்ட்ரோம் விளைவால், செயற்கைக்கோள் செயல்பாடுகள் மற்றும் பூமியில் அன்றாட வாழ்வின் பயன்படுத்தப்படும் இண்டர்நெட், தொலைத்தொடர்பு போன்றவை பாதிப்படையக்கூடும்
பொருளாதார விளைவுகள்
1. பில்லியன் கணக்கான டாலர்கள் சேதம்,
விண்வெளியில் இருக்கும் குப்பைகளால், பூமியிலிருந்து அனுப்பப்படும் செயற்கைக்கோள்களின் செயல் இழப்பு மற்றும் அதன் விளைவாக ஏற்படும் குப்பைகள் குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தலாம், தொலைத்தொடர்பு, வழிசெலுத்தல் மற்றும் வானிலை முன்னறிவிப்பு உட்பட பல்வேறு தொழில்களை பாதிக்கலாம்.
2. விண்வெளிப் பணிகளுக்கான அதிகரித்த செலவுகள்: குப்பைகளை அகற்றுவதற்காக விண்வெளி பயணமானது மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இதன் செலவுகள் அதிகரிக்கும்.
1. சுற்றுப்பாதை மாசுபாடு:
கெஸ்லர் சிண்ட்ரோம் நிகழ்வால் உருவாகும் குப்பைகள் பல நூற்றாண்டுகளாக பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும்., இதனால் புதிய செயற்கைக்கோள்களை ஏவுவது அல்லது விண்வெளிப் பயணங்களை நடத்துவது கடினம்.
2. வளிமண்டலத்தில் குப்பைகள் மீண்டும் நுழையும் அபாயம்: சில குப்பைகள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையலாம், இதனால் மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படலாம்.
சமூக விளைவுகள்
1. முக்கியமான சேவைகளின் சீர்குலைவு: செயற்கைக்கோள்களின் இழப்பு முக்கியமான சேவைகளை சீர்குலைக்கலாம்.
1. ஜி.பி.எஸ் மாற்றம்:
போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் அவசர சேவைகளை பாதிக்கிறது.
2. தொலைத்தொடர்பு:
இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் உட்பட உலகளாவிய தொடர்பு நெட்வொர்க்குகளை பாதிக்கிறது.
3. வானிலை முன்னறிவிப்பு:
கடுமையான வானிலை நிகழ்வுகளை முன்னறிவித்து தயார்படுத்தும் திறனைப் பாதிக்கிறது.
2. அறிவியல் ஆராய்ச்சி மீதான தாக்கம்:
செயற்கைக்கோள்களின் இழப்பு மற்றும் அதன் விளைவாக வரும் குப்பைகள் பூமியின் கண்காணிப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் வானியல் உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு இடையூறாக இருக்கலாம்.