டெக்

விண்வெளிக்கு மனிதரை அனுப்ப மேலும் 3 ஆண்டு ஆகும் - மயில்சாமி அண்ணாதுரை

கலிலுல்லா

விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டம் நிறைவேற மேலும் 3 ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், ''3-வது நிலவு பயணமும் தள்ளி போகிறது; சந்திரயான் 3 செயற்கைக்கோள் ஓராண்டுக்குள் விண்ணில் ஏவப்படும். விமான பயணம்போல விண்வெளிக்கு செல்ல வாகனங்கள் உருவாகும்.


வானில் உள்ள செயற்கைக்கோள் கழிவுகளை அகற்ற முயற்சி நடந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தாவரம் வளர்ப்பதற்கான மூலக்கூறு ஆராயப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.