டெக்

இன்று விண்ணில் பாய்கிறது பி‌எஸ்எல்வி சி-48

இன்று விண்ணில் பாய்கிறது பி‌எஸ்எல்வி சி-48

webteam

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50 ஆவது ராக்கெட்டான பி‌.எஸ்.எல்.வி. 48 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது.

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1 ஆவது ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகிறது. இந்தச் செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி சி-48 மூலம்  இன்று மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. 

ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததையடுத்து இறுதிக்கட்ட பணியான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் வைத்து அனுப்பப்படவுள்ளன. விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களிலேயே பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட்டிலிருந்து ரீசாட் 2பிஆர் 1 செயற்கைக்கோள் பிரிந்து, பூமியிலிருந்து 576 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் 75 ஆவது ராக்கெட் ஆகும்.