டெக்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30

jagadeesh

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-30 இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பிரான்சின் பிரெஞ்சு கயானாவின் கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய முகமையின் ஏரியேன்-5 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக இந்த ஜிசாட்-30 செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் DTH, டிஜிட்டல் சேவை உள்ளிட்டவைகளுக்கு உதவும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.