தேவையற்ற மொபைல் அழைப்புகளை பெறுவதில் உலக அளவில் இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
‛ஸ்பேம் கால்' என்று அழைக்கப்படும் தேவையற்ற அழைப்புகள் குறித்து ட்ரூகாலர் நிறுவனம் நடத்திய ஆய்வில் முதலிடம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. அடுத்த இரு
இடங்களை முறையே அமெரிக்காவும், பிரேசிலும் பிடித்துள்ளன. ஆய்வின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்....
1. ‛ஸ்பேம் கால்ஸ்' எனப்படும் தேவையற்ற அழைப்புகளை, உலகளவில் அதிகமாக பெறும் வாடிக்கையாளர்களை கொண்டு நாடு இந்தியா.
2. இந்தியாவில் மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களே 54 சதவீதம், தேவையற்ற அழைப்புகளை கொடுத்து வாடிக்கையாளர்களை தொல்லை செய்கிறது.
3. வர்த்தக நிறுவனங்கள் 21 சதவீத தேவையற்ற அழைப்புகளை கொடுத்து வாடிக்கையாளர்களை தொல்லை செய்கிறது.
4. தெரிந்தே தொல்லை தரும் வகையில் 20 சதவீத அழைப்புகளும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வருவதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.