டெக்

5வது புவி வட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-2 

5வது புவி வட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-2 

webteam

சந்திரயான்2 விண்கலம் 5வது புவி வட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.

இந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு நிலவின் வட்டப்பாதையை சென்று அடையும். இதற்காக ஏற்கெனவே நான்கு முறை வட்டப் பாதை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 3.04 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்தை 5ஆவது மற்றும் இறுதி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு பிறகு சந்திரயான்-2 விண்கலம் நிலவின் வட்டப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.