டெக்

செப்டம்பர் 7ல் நிலவில் தரையிறங்குகிறது சந்திராயன் - 2 

செப்டம்பர் 7ல் நிலவில் தரையிறங்குகிறது சந்திராயன் - 2 

webteam

சந்திராயன் - 2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் - 2 விண்கலம் கால்பதிக்க உள்ளதாக இஸ்ரோ டிவிட்டரில் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.