தமிழ்நாடு

பெற்றோர் எதிர்ப்பு... காதலி வீட்டு முன்பு தற்கொலை செய்த காதலர்..!

பெற்றோர் எதிர்ப்பு... காதலி வீட்டு முன்பு தற்கொலை செய்த காதலர்..!

Rasus

சென்னை எண்ணூரில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதலி வீட்டு முன் தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற காதலி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வடபழனி துரைசாமி தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன். நந்தனத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவரும், அதேநிறுவனத்தைச் சேர்ந்த மாலதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். மாலதியின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக மாலதி வேலைக்கு வராததால், அவரது வீட்டிற்கு மொய்தீன் சென்றுள்ளார்.

அவரை பெண்ணின் பெற்றோர் தடுத்ததால், அங்கேயே பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக்கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற மாலதியின் உடலிலும் தீப்பற்றியது. படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி மொய்தீன் உயிரிழந்தார். மாலதிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)