ஆண்டிப்பட்டி அருகே காதல் தோல்வி காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள டி- ராஜகோபாலன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் வெள்ளச்சாமி. இவர் ஐடிஐ கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளச்சாமி அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண் வேறு ஒரு நபரை காதலிப்பதாக தெரிவித்துவிடவே மனமுடைந்த வெள்ளச்சாமி இன்று அதிகாலை தங்களது மாட்டுகொட்டகை வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த ஆண்டிப்பட்டி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.