தமிழ்நாடு

தாயை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்.. தாய்மாமனை கொலை செய்த இளைஞர்..!

webteam

தாயை ஆபாசமாக திட்டியதால் தாய்மாமனை கருங்கல்லால் குத்தி கொடூரமாக கொன்ற இளைஞர் கைது  செய்யப்பட்டுள்ளார். 

சென்னை ஆலந்தூர், ஆசர்கானா தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் கோகுல்ராஜ்(31). தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ்(எ) அப்புன்(60). நேற்றிரவு 12 மணியளவில் எத்திராஜ் குடித்துவிட்டு தனது தங்கையான சரஸ்வதியை ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். தாய்மாமன் தொடர்ந்து குடித்துவிட்டு வந்து தனது தாயை திட்டுவதை கண்ட கோகுல்ராஜ், ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றும் அதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது.

(கொலை செய்யப்பட்டுள்ள எத்திராஜ்)

அப்போது வீட்டிலிருந்து தாய்மான் எத்திராஜை, கோகுல்ராஜ் விரட்டியுள்ளார். ஆனால் வீட்டிலிருந்து வெளியில் வந்த அவர் போகாமல் மீண்டும் திட்டிக் கொண்டிருந்ததால், உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான கோகுல்ராஜ் கீழே இருந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து எத்திராஜ் முகத்தில் கொடூரமாக தாக்கினார்.

இதில் நிகழ்விடத்திலேயே எத்திராஜ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.பின்னர் பரங்கிமலை போலீசார் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய்மாமனை கொலை செய்த கோகுல்ராஜை பரங்கிமலை போலீசார் கைது செய்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.