தமிழ்நாடு

’’காதலை கைவிட வேண்டாம்’’ - காதல் தோல்வியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

webteam

ஆர்எஸ் மங்கலத்தில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிந்த இளைஞர் காதல் தோல்வியால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடலை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த நல்லசாமி என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு காதலை விட்டு விடுமாறு அவரது காதலி கூறியதாகச் சொல்லப்படுகிறது.

காதலை கைவிட வேண்டாம் என்று காதலியிடம் கெஞ்சியும் உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நல்லசாமி காதல் தோல்வியை தாங்காமல் அவர் தங்கியிருந்த அறையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருவாரூர் அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் பைனான்ஸ் ஊழியர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.