உயிரிழந்த  சுஜி ரீட்டா
உயிரிழந்த சுஜி ரீட்டா  PT WEB
தமிழ்நாடு

திருவள்ளூர் : மர்மமான முறையில் உடல் கருகி உயிரிழந்த பெண்; முகநூல் நண்பரிடம் விசாரணை!

webteam

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் காந்தி சாலை பகுதியில் வசிப்பவர் அசோகன் (47). இவருக்கு முகநூல் வழியாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜி ரீட்டா (65) என்பவருடன் மிக நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சுஜி ரீட்டாவிடம் ரூ 3,50,000 பணத்தை அசோகன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை வாங்கிச் செல்வதற்காக அசோகன் வீட்டில் தங்கி இருந்துள்ளார் சுஜி ரீட்டா.

இந்நிலையில் அசோகன் வெளியில் சென்று இருந்த போது, பூட்டிய வீட்டில் மர்மப் பொருள் வெடித்துள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த, அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து வீட்டின் உள்ளே, தீயில் கருகி உயிரிழந்த சுஜி ரீட்டா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருத்தணி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சுஜி ரீட்டாவின் முகநூல் நண்பர் அசோகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.