தமிழ்நாடு

ஷூ-வுக்குள் இருந்து கடித்த பாம்பு - சென்னையில் உயிருக்கு போராடும் பெண்

ஷூ-வுக்குள் இருந்து கடித்த பாம்பு - சென்னையில் உயிருக்கு போராடும் பெண்

webteam

(மாதிரிப் புகைப்படம்)

சென்னையில் பெண் ஒருவர் ஷூ-வை சுத்தம் செய்யும்போது அதற்குள் பதுங்கியிருந்த பாம்பு கையில் கடித்தது.

சென்னை கே.கே.நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவர் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமித்ரா (35). இவர் நேற்று இரவு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். வீட்டிலிருந்த ஒரு ஷூவை கையில் எடுத்து அவர் சுத்தம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது ஷூவில் பதுங்கி இருந்த பாம்பு சுமித்ராவின் கையில் கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.