சுரேஷ்-அனுப்பிரியா
சுரேஷ்-அனுப்பிரியா puthiyathalaimurai
தமிழ்நாடு

முந்திரி காட்டில் மீட்கப்பட்ட ஆண் சடலம்... விசாரணையில் அம்பலமான திருமணத்தை மீறிய உறவு? ஷாக் பின்னணி!

PT WEB

அரியலூரில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரின் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணனை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அது அரியலூர் மாவட்டம் வடகடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் சடலம் என்றும், இவர் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

வேல்முருகன்

மேலும் சுரேஷ் மனைவி அனுப்பிரியாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது சித்தப்பா மகன் (அனுப்பிரியாவிற்கு அண்ணன் முறை) வேல்முருகன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் சென்னையிலிருந்து கணவர் சுரேஷை ஊருக்கு வரவழைத்து, அங்கிருந்து விடியற்காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் கொலை செய்யப்போகும் இடத்துக்கு கூட்டிச்சென்றுள்ளார் மனைவி அனுப்பிரியா. இடம் வந்தவுடன், மயக்கம் வருவது போல் உள்ளது என பைக்கை நிறுத்தி நாடகம் ஆடியுள்ளார்.

இதனையடுத்து அங்குப் பதுங்கியிருந்த வேல்முருகன், சுரேஷ் சுதாரிப்பதற்குள் சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை வெண்மான்கொண்டான் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சாக்குப் பையில் மூட்டை கட்டிப் போட்டுள்ளனர். மறுநாள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். தொடர்ந்து கொலையை மறைக்க, இறந்த சுரேஷின் செல்ஃபோனை சென்னைக்கே கொண்டுவந்ததாகவும் தெரிகிறது. இவையாவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சுரேஷ்

இதனைத்தொடர்ந்து இறந்த சுரேஷின் மனைவி அனுபிரியா மற்றும் அவருடைய ஆண் நண்பர் வேல்முருகன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் கணவனை, அண்ணன் முறைகொண்ட ஒருவரோடு சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.