தமிழ்நாடு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை

JustinDurai

சென்னை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிகாலை பரவலாக மழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலை பனி மூட்டம் சற்று தணிந்து வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. தண்டையார்பேட்டை, ராயபுரம், பாரிமுனை, சேப்பாக்கம், அண்ணா சாலை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, அடையாறு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. ஒருசில சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை மழை பெய்தது. விளமல், தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை மழை பெய்தது.