தமிழ்நாடு

'முதல்வர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட விரும்பும் ராகுல் காந்தி' - செல்வப்பெருந்தகை

JustinDurai

ராகுல்காந்தி அடுத்த முறை தமிழ்நாடு வரும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சைக்கிள் ஒட்டுவதற்கான விருப்பத்தை வைத்துள்ளதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் என குறிப்பிட்டார். முதலமைச்சரின் உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவிற்கு ராகுல் காந்தி வந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலினின் வயது குறித்து பேசும்போது,

அவர் வாரம்தோறும் சைக்கிள் ஒட்டுவதாக, தான் கூறியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக முதலமைச்சரிடம் பேசிய ராகுல்காந்தி, அடுத்த முறை வரும்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற விருப்பத்தை முன் வைத்துள்ளதாகக் கூறினார்

இதையும் படிக்க: 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் - காலநிலை மாற்ற கவனஈர்ப்பு உரையாடல்