செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

அமைச்சர் கைதானால் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்னென்ன? #Video

PT WEB

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம் மற்றும் அவரது சட்டமன்ற அலுவலம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

நெஞ்சில் கைவைத்தபடி துடிதுடித்தபடி அவர் காரில் மருத்துவமனைக்கு அப்போதே அழைத்துச்செல்லப்பட்டார். இந்நிலையில், அவர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவாரா, அல்லது இதுவே கைது நடவடிக்கையா என பரபரப்பு எழுந்தது.

இதற்கிடையே, அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 3 மணியளவில் தெரிவித்தனர்.

அமைச்சராக இருப்பவரை கைது செய்யும்போது ஆளுநரிடமும், எம்.எல்.ஏ. என்ற முறையில் சபாநாயகரிடமும் தெரிவிக்க வேண்டும். இதுபோல ஒரு அமைச்சர் கைதானால் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்!