தமிழ்நாடு

பூ.. பாடல்.. தழுவல்’ கண்ணீர்மல்க ஆசிரியைக்கு பிரியாவிடை! மே.வங்கத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

கலிலுல்லா

பிரியாவிடை என்பது எப்போதும் பிரியத்தின் விடை தானே. பிரியா என்பது பிரியாத என்பதாக பொருள் கொள்ளலாம். அப்படித்தான் மேற்குவங்காளத்தில் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் பிரியா விடைகொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் பிரியா விடை அளித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு மாணவிகள், சம்பா என்ற தனது வகுப்பு ஆசிரியரை கண்மூடி அழைத்துச் செல்கின்றனர்.

முன்னதாக ஆசிரியைக்காக மைதானத்தில் மாணவர்கள் காத்திருக்கின்றனர். ஆசிரியரின் கண்களை திறந்ததும், சுற்றியிருக்கும் மாணவிகள், கையில் ரோஜா பூவை ஏந்திக்கொண்டு கண்களில் நீர் தழும்ப ஹிந்தி பாடல் ஒன்றை பாடுகின்றனர். சம்பா என்ற அந்த ஆசிரியையும் கண்ணீருடன் நின்றுகொண்டிருக்கிறார். பின்னர் மாணவிகள் அனைவரும் ஆசிரியையை கட்டி தழுவுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.