தமிழ்நாடு

'மாநில, மொழி உரிமையைக் காக்க பாடுபடுவோம்' - முதல்வர் ஸ்டாலின் மடல்

Veeramani

மாநில உரிமை, மொழி உரிமை காத்திட கண்ணும் கருத்துமாக தொடர்ந்து பாடுபடுவோம் என திமுகவினருக்கு அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து நாடு முழுவதும் விவாதமாகியிருப்பதை முதலமைச்சர் தனது மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.



அமித்ஷாவின் கருத்துக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்ததோடு, கண்ணூரில் நடைபெற்ற சிபிஎம் தேசிய மாநாட்டில் மாநில உரிமைகளுக்கான குரலை உயர்த்தியதாக தெரிவித்துள்ளார். இந்திய அளவில் மாநில உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு தேவை என்பதை எடுத்துரைத்ததையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம், அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம் என திமுகவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மாநில உரிமை, மொழி உரிமையை காத்திட கண்ணும் கருத்துமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.