தமிழ்நாடு

இன்னும் 3 நாள் வெயில் பின்னும்!

webteam

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், நாமக்கல், மதுரை, கரூர், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் வெயில் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூரில் 107 டிகிரி வெப்பம் பதிவானது. இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நான்கு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.