சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 3,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதன்காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்திறக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 2ஆயிரம் கன அடியாகவுள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை தொடரும் நிலையில் புழல் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கையாக நீர்திறக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.