தமிழ்நாடு

காவிரியில் நீர்வரத்து 15,000 கன அடியாக குறைந்தது

Sinekadhara

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து 15ஆயிரம் கன அடியாக குறைந்தது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 25ஆயிரம் கன அடியிலிருந்து படிப்படியாக குறைந்து 15ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. அதனால், மக்கள் தடையை மீறி ஆற்றில் இறங்கிவிடாமல், காவல், தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.