தமிழ்நாடு

விழுப்புரம்: 25 கோடி செலவில் கட்டப்பட்ட அணை - 2 மாதத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவு

webteam

விழுப்புரத்தில் சுமார் 25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேற வந்து கொண்டிருக்கிறது.

விழுப்புரம் அருகே தளவானூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கடந்த மாதம் ரூ.25 கோடியில் தடுப்பணை திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வந்து கொண்டிருக்கிறது. தரமற்ற கட்டுமானமே தடுப்பணை கசிவிற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.