தமிழ்நாடு

சென்னையில் 218 இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி

கலிலுல்லா

சென்னை மாநகராட்சியில் 561 இடங்களில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், 218 இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் பரவலாக கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி அதிாரிகள் தீவிரப்படுத்தினர். இதன் காரணமாக சென்னை முழுவதும் 561 இடங்களில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதில் 218 இடங்களில் இருந்து முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதேபோல், 20 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீரும் வெளியேற்றப்பட்டது. ரங்கராஜபுரம் மற்றும் மேட்லி சுரங்கப்பாதைகளில் மட்டுமே தற்போது தண்ணீர் தேங்கியிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.