நெல்லை மேயர்
நெல்லை மேயர்  ட்விட்டர்
தமிழ்நாடு

நெல்லை: மேயர் சரவணன் பதவி தப்புமா.. நாளை வாக்கெடுப்பு! ரகசிய இடத்தில் திமுக கவுன்சிலர்கள்?

PT WEB

திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை (ஜனவரி 12) வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

மேயர் சரவணன் எதிராக திமுக கவுன்சிலர்கள், போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கிடையில், மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு, மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் கடந்த மாதம் கடிதம் கொடுத்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை (ஜன. 12) நடைபெறும் என்று ஆணையர் அறிவித்துள்ளார். வாக்கெடுப்பில் பங்கேற்பதை தடுக்க ரகசிய இடத்தில் திமுக கவுன்சிலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து முழுச் செய்தியையும் அறிய இந்த வீடியோவில் பார்க்கவும்.