சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் உள்ளிட்டவை தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதியும் இந்தப் பணி நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு விடுபட்ட வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் மாற்று திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் வருகின்ற 23ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 18 முதல் 21 வயதைச் சேர்ந்த இளம் வாக்காளர்கள், மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு
விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் முனைவர். கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.