தமிழ்நாடு

அமைச்சர் செல்லும் இடத்துக்கெல்லாம் பேனரை தூக்கி சென்ற தொண்டர்கள்

webteam

திருவாரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முன்னேற்பாடுகளுக்காக அமைச்சர்கள் சென்ற இடத்திற்கெல்லாம் தொண்டர்கள் பேனர்களை தூக்கிக்கொண்டே சென்றனர்.

திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், காமராஜ், தங்கமணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதற்காக அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் தொண்டர்கள் பேனரை இருபுறமும் பிடித்தபடி பின் சென்றனர்.