தமிழ்நாடு

10 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் நிற்க முடியாது

webteam

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் தண்டனை வழங்கப்பட்ட 4 ஆண்டுகள் உட்பட 10 ஆண்டுகளுக்கு சசிகலாவால் தேர்தலில் நிற்க முடியாது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் பெங்களூரு நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பினை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதால், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தல் நிற்க முடியாது.