தமிழ்நாடு

விழுப்புரம்: காணாமல் போன 10 வயது சிறுவன் ஏரியில் இருந்து சடலமாக மீட்பு

kaleelrahman

விழுப்புரம் அருகே நேற்று மாலை காணாமல் போன 10 வயது சிறுவன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

விழுப்புரம் அருகே உள்ள சோழம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவருடைய மகன் எழிலரசன் (10) 5 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று மாலை முதல் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்து தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சோழம்பூண்டி ஏரியில் சடலமாக சிறுவனின் உடல் மிதந்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் சிறுவனின் உடலை மீட்டனர். இதையடுத்து நேற்று மாலை குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது காணை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது