தமிழ்நாடு

தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா - வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்

webteam

அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜயகாந்த், ''வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்த சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்'' எனத் தெரிவித்துள்ளார்.

கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோவையும் பதிவிட்டுள்ள விஜயகாந்த், #தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா என்ற ஹேஸ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்