தமிழ்நாடு

பேரவைச் செயலரைச் சந்தித்தார் விஜய்பாஸ்கர்

webteam

தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டப்பேரவைச் செயலரை இன்று சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பாக, தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தார். பின்னர் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதினையும் சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி விஜயபாஸ்கர் கூறும்போது, அரசு மருத்துவர்களின் போராட்டம் தொடர்பாக சந்தித்துப் பேசியதாக விஜயபாஸ்கர் கூறினார்.