தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் pt web
தமிழ்நாடு

“அரைவேக்காட்டுத்தனமாக..” திமுக எம்.எல்.ஏக்கள் மீது வேல்முருகன் வைத்த விமர்சனம்!

”எந்த பிரச்சினையை நான் எழுப்ப முற்படுவேன் என்பதை தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக அரைவேக்காட்டுத்தனமாக என்னை எதிர்ப்பது என்பது ஜனநாயக மாண்புக்கும் மரபுக்கும் எதிரானது” - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

PT WEB

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சட்டபேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடலூர் மாவட்டத்தில் என்னுடைய தொகுதியில் பல்வேறு பிரச்சனைகளை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை தந்திருக்கிறேன்.

அவை எல்லாம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நான் சில கோரிக்கைகளை முன்வைக்க இருந்த போது பின் வரிசையில் இருந்த திமுக உறுப்பினர்கள் என்ன பேச வருகிறேன் என்று புரிந்து கொள்வதற்கு முன்பாகவே எனக்கு எதிராக கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயக மாண்பு அல்ல. பேரவை தலைவரும் ஆளுங்கட்சி கொரடாவும் இதை கண்டிக்க வேண்டும்.

எந்த பிரச்சினையை நான் எழுப்ப முற்படுவேன் என்பதை தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக அரைவேக்காட்டுத்தனமாக என்னை எதிர்ப்பது என்பது ஜனநாயக மாண்புக்கும் மரபுக்கும் எதிரானது. இதை ஆளும் கட்சி கொறடாவோ, பேரவைத் தலைவரோஅ நுமதிக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.