தமிழ்நாடு

வேலூர்: வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த விவகாரம் - உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

kaleelrahman

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ததாக வீடியோ வெளியான நிலையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் - சித்தூர் நெடுஞ்சாலையில,; பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியானது. இதையடுத்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் சரவணனை, ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.