Vikraman
Vikraman pt desk
தமிழ்நாடு

"திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" - பெண் அளித்த புகாரில் விக்ரமன் மீது வழக்குப்பதிவு

webteam

சென்னை கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரமன். இவர், விடுதலை சிறுதைகள் கட்சியின் மாநில இணை செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் மீது இளம்பெண் வழக்கறிஞரான கிருபா முனுசாமி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணைய தளம் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

vikraman

அந்த புகார் மனுவில், ”விக்ரமன் தன்னை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னிடம் பணப் பறிப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதோடு சாதி ரீதியாகவும் அசிங்கப்படுத்தி, பாலியல் ரீதியாகவும் என்னை துன்புறுத்தினார். இது தொடர்பாக விக்ரமன் மீது விசிக கட்சியில் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகுந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு சென்றுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பான புகார் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போலீசாரும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் வழக்கறிஞரான கிருபா சென்னை காவல் ஆணையர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை இல்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விக்ரமன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

court order

இந்திய தண்டனை சட்ட பிரிவு, மோசடி 406, நம்பிக்கை மோசடி 420 மோசடி,376 பாலியல் வன்கொடுமை,499, 500 அவதூறு பரப்பியது 506(I) 506 (II) கொலை மிரட்டல் 507 அவமதித்து சுற்ற விடுதல் 66A, 66E, 67, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காகவும் SC ST PREVENTION தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு, TNPWH ACT பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.