தமிழ்நாடு

பிப்ரவரி 1 முதல் புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்று தேவையில்லை - தெற்கு ரயில்வே

Sinekadhara

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லையென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்னதாக ரயில் பயணச்சீட்டு வாங்கும்போது தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கவும் சீசன் பயணச் சீட்டு வாங்கவும் தடுப்பூசி சான்று தேவையில்லை எனக் கூறியுள்ளது. இதனிடையே, யூடிஎஸ் செயலி மூலமும் புறநகர் ரயில் பயணத்திற்கான பயணச்சீட்டை பெறலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.