தமிழ்நாடு

ரூ.4 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஊத்துக்காட்டு எல்லையம்மன்

kaleelrahman

பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில், ரூ.4 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது  பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

பூந்தமல்லியை அடுத்துள்ள குமணன்சாவடியில் பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு ரூ.500, ரூ.100, ரூ.20, ரூ10 உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு மாலையாக கட்டி தோரணங்களாக அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் கோயிலின் மேல்பகுதி மற்றும் உள்பகுதி முழுவதும் வாழை, கொய்யா, பப்பாளி, ஆப்பிள், மாதுளை, தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.