தமிழ்நாடு

நெல்லை, செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத தினசரி ரயில்

webteam

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.

தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் இந்த முன்பதிவில்லாத ரயில், மறுநாள் மாலை 3.30 மணிக்கு நெல்லைக்கு செல்லும். மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு சென்னைக்கு வரும்.
செங்கோட்டை செல்லும் ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வரும். இந்த புதிய ரயில்களில் 18 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் ரயில் இயக்கப்படும் தேதியை தெற்கு ரயில்வே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.