தமிழ்நாடு

சுட்டெரிக்கும் வெயில்...வரப்பிரசாதமாக வாகனத்தில் வந்த குடை

webteam

சுட்டெரிக்கும் கோடை வெயிலில், காரில் செல்வது என்றால் பிரச்னை இல்லை. ஆனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோரை, சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதைத்துவிடுகிறது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மதுரையில் அறிமுகமாகியுள்ள இருசக்கர வாகன குடை, அவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. கோடை வெயிலை சமாளிக்கும் இந்த நூதன யோசனை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பபை பெற்று வருகிறது