தமிழ்நாடு

“உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்- நீதிமன்றம் கருத்து

Rasus

நீட் ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் மாணவர் உதித் சூர்யா சிக்கிய பிரச்னையில் தந்தைதான் வில்லன் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டு 15 நாள்களுக்கு மேலாகியும் காவல்துறையினர் விசாரணைக்கு எடுக்காதது ஏன்? எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.