தமிழ்நாடு

வடபழனி பணிமனையில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு

webteam

சென்னை வடபழனி மாநகர அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நேற்றிரவு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று, அருகே இருந்த சுவரின் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில், அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த 7 ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். 

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் சேகர் மற்றும் பாரதி என்ற இரு ஊழியர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். படுகாய மடைந்த மேலும் 5 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.